ஆசியாவில் இடம்பெற்ற ஆணழகன் போட்டியில் இலங்கை பிரஜை கலந்து கொண்டார்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஷ்பராஜ் முதலிடம் பெற்றுகொண்டு நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
அத்தோடு அவர் வெற்றி பெற்றதை முன்னிட்டு பதக்கம் மற்றும் வெற்றி கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விசயமாகும்.
நாட்டில் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் மிக விரைவாகவும் தெளிவாகவும் உங்களுக்கு தருவதற்காக தயாரிக்கப்பட்டது.
Sunday, August 27, 2017
பிரபாகரனின் மனைவி, மகள் எம்மிடம் கிடைத்திருந்தால் பாதுகாத்திருப்போம்-கோத்தா
பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் எம்மிடம் கிடைத்திருந்தால் அவர்களையும் நாம் பாதுகாத்திருப்போம் ஆனால் அவர்கள் எம்மிடம் கிடைக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும் பிரபாகரனின் தந்தையையும் தாயையும் கூட நாம் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்களைப்பற்றி அறிந்த பின்பும் நாம் அவர்களைப் பாதுகாத்தோம்.” என கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைவதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் அவருடைய தொலைபேசி அழைப்பை நாம் கேட்டோம் என கோத்தபாய கூறியுள்ளார்
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போரை கைவிட்டுவிட்டு வெளிநாட்டுக்கு ஓடி விடுங்கள் நாம் பிறகு ஒரு நேரம் வந்து நாட்டை மீட்டு எடுப்போம் என குமரன் பத்மநாதன் பிரபாகரனிடம் கூறியமைக்கு என்னால் நிலைமைகளை மாற்ற முடியும், ஆயுதங்கள் சற்று தேவை, என கூறினார்.
இந்த உரையாடலானது நாம் பிரபாகரன் சரணடைய விரும்பவில்லை என்பதை எடுத்துக்காட்டியுள்ளது என தெரிவித்தார்.
அத்துடன் கோத்தபாயவின் உரையாடலின் போது மிக முக்கியமான கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது.
அந்தக் கேள்வியில் பொட்டு அம்மான் மற்றும், பிரபாகரனின் மனைவி, மகள் துவாரகா ஆகியோர் எங்கே? அவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து வினாக்கள் எழுப்பப்பட்டது.
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த கோத்தபாய களப்பு வழியாக தப்பிச்செல்ல முற்பட்ட புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
ஆகவே அந்த தாக்குதலில் அவர்கள் இறந்திருக்கலாம். ஏனெனில் அங்கு இறந்தவர்களின் உடல்கள் சேதமாகி இருந்தன. உருகுலைந்த நிலையில் காணப்பட்டன. ஆகவே அடையாளம் தெரியாத நிலையில் இருந்தது என்று கூறினார்.
அத்துடன் பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் எம்மிடம் கிடைத்திருந்தால் அவர்களையும் நாம் பாதுகாத்திருப்போம். ஆனால் அவர்கள் எம்மிடம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
கிளிநொச்சியில் பேருந்து தரிப்பிடத்தில் வைத்து வாள்வெட்டு
கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியளவில் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்றவர் மீது, உழவு இயந்திரத்தில் வருகைதந்த ஒருவர் வாளால் வெட்டி தப்பி சென்றுள்ளார்.
இந்த வாள்வெட்டு சம்பவத்தில் 53 வயது மதிக்கத்தக்க காந்திகிராமம் பகுதியை சேர்ந்த கிருபாகரன் என்ற 4 பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்நிலையில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழிற்கு விரையும் பிக்குகள் குழு!!
பலத்த பாதுகாப்புடன், சாமோபாலி மஹா நிக்காய அஸ்கிரிய பீடத்தின் மாகாநாயக்க தேரர் வரக்காக்கொட ஞானரத்ண மஹா தேரர் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 28 ஆம் நாள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர்.
உலக பௌத்த சங்கத்தினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் இக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ள இவர்கள் எதிர்வரும் 30ஆம் நாள் யாழ். மாவட்டச் செயலகத்தில் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
அத்துடன் யாழ் புத்தூர் மடிஹே பஞ்சசீஹ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வும் அத்துடன் வேறு பலதரப்புகளுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளது.





