நந்திக்கடலும் ஓர்நாள் வற்றலாம்
வற்றாப்பளை அம்மனும் சிலவேளை கண்திறக்கலாம்
வன்னி மண்ணில் மறுபடியும் வசந்தங்கள் வீசலாம்
சூரியன் ஒருவேளை மேற்கில் உதிக்கலாம்
துரோகத்திற்கு பதிலடியாய் தலைகள் தரையில் உருளலாம்
காட்டிக்கொடுப்புக்களுக்கு கண்கட்டி தண்டனைகள் கொடுக்கப்படலாம்
கட்டவுட்ட்க்கு ஊற்றப்படும் பால்கள் கட்டாயம் கல்லறைகளில் தெளிக்கப்படலாம்
வித்தியாக்கள் விழிமூடி வசந்தமாய் வானில் பறக்கலாம்
விதவைப்பட்டங்கள் மலிந்துபோகலாம்
சிறுத்தையின் கூண்டுகள் தானாகவே திறந்து போகப்படலாம்
செண்பகங்கள் செட்டை தட்டிபறக்கலாம்
மாகாணசபைகள் மண்ணோடு போகலாம்
கருத்தடை மாத்திரைகள் காணாமலே போகலாம்
ஆணுறைகளின் ஆதிக்கம் அறவே அற்றுப்போகலாம்
வாளெடுத்தவர் வம்புச்சண்டைக்கு போனவர்
வாய்மூடி வயலில் ஏர் பிடிக்கலாம்
கள்ளக்காதல் ஜோடிகள்
களவெடுத்த காவாலிகள்
மின்சாரக்கம்பங்களுடன் முண்டமாய் தெரியலாம்
காதலென்ற பேர்வையில்
கற்பை பறிகொடுக்கும்
கன்னியர்கள் கௌரவமாய் திரியலாம்
கோஷ்டிமோதல்கள்
கோவில்வாசல் சண்டைகள்
தட்டி நிமிர்த்தி
முட்டி போட வைக்கப்படலாம்
இன்னும் எத்தனையோ அநியாயங்கள்
அக்கிரமங்கள் அசிங்கங்கள் அத்திவாரத்துக்கு வராமலேயே அமர்ந்து போகலாம்
அண்ணன் மீண்டுவந்தால் மாத்திரமேயன்றி
இல்லையேல் இன்னும் இன்னும் தொடரலாம் தொடர்கதையாய்.......!!!!!!!!

No comments:
Post a Comment