Thursday, August 31, 2017

புளூவேல் விளையாட்டால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

புளூவேல் விளையாட்டு மதுரை கல்லூரி மாணவனின் உயிரை காவு வாங்கியுள்ளது.
மதுரை திருமங்கலம் அருகே உள்ள மொட்டமலை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் என்ற கல்லூரி மாணவன் புளூவேல் எனப்படும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, திடீரென மன அழுத்தத்துக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார், அவரது உடலில் புளூவேல் விளையாட்டின் அடையாளம் பச்சை குத்தப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
இதனை ஆதாரமாக வைத்து புளூவேல் விளையாட்டின் தாக்கத்தால் குறித்த மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையினை முன்னெடுத்துள்ளனர்.
முதன் முறையாக தமிழகத்தில் புளூவேல் விளையாட்டால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment