Tuesday, September 19, 2017

அக்கரைப்பற்றில் விபத்து, ஸ்தலத்திலேயே ஒருவர் பலி...

 அக்கரைப்பற்றில் இடம்பெற்ற விபத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்று 2ஆம் கட்டை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் 8ஆம் கட்டையை சேர்ந்த அலியார் என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்
 மற்றும் அக்கரைப்பற்று 06ஆம் குறிச்சியை சேர்ந்த அரூஸ் என்பவர் காயங்களுடன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment