Monday, September 11, 2017

46 ஆண்டுகள் கர்ப்பமாக இருந்த பெண்- 4 மணி நேர அறுவை சிகிச்சை.. நடந்தது என்ன?

 ஷாரா அப்போடோளிக் என்ற பெண் 46 ஆண்டுகள் கர்ப்பமாக இருந்துள்ளதாக தெரியவருகிறது.
இவர் மொரோக்கோ நாட்டைச்சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1955ஆம் ஆண்டு 26 வயதில் ஷாரா கர்ப்பமாக இருந்துள்ளார்.
அந்த தருணத்தில் ஏற்பட்ட பிரசவ வலியால் 48மணி நேரம் வீட்டிலேயே துடித்துள்ளார்.
 பின் குழந்தை பிரசவிக்கமுடியாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.
இந்த அறுவை சிகிச்சையினால் தனக்கும் தன் குழந்தைக்கும் ஆபத்து நேரந்துவிடுமென எண்ணிய குறித்த பெண் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சிறிது காலம் வலியிருந்ததாகவும், காலப்போக்கில் அந்த வலி மறைந்துவிட்டதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில் ஆண்டுகள் பல கடந்துள்ளது. 75 வயதான ஷாராவிற்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது இறந்த குழந்தை தினமும் கல்சியம் எடுத்துக்கொண்டதால் கட்டியாக மாறி வயிற்றின் உள்ளே இருந்துள்ளது.
4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் கல் குழந்தை அகற்றப்பட்டது. தற்போது 75 வயதான ஷாரா பாட்டி நலமாக உள்ளாராம்.

No comments:

Post a Comment