Monday, September 11, 2017

யாழில் வாள்களுடன் உலாவும் மர்மநபர்கள்: வெளியாகும் பகீர் தகவல்!!

யாழ்.நெல்லியடிப் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினர் நடமாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நெல்லியடி கப்பூது வீதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கப்பூது வீதியில் முகமூடி அணிந்த ஒருவர் உட்பட நால்வர் வாள் மற்றும் ஆயுதங்களுடன் நீண்டநேரம் நடமாடியதாக சம்பவத்தை நேரில் கண்ட சிலர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கொடிகாமத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நால்வரை குறித்த குழுவினர் வழிமறித்துள்ளதோடு, அவர்களைத் தாக்கவும் முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது
அத்துடன், வாள்வெட்டுக் குழுவினர் மோட்டார் சைக்கிள் ஒன்றினை சேதப்படுத்தியதோடு மற்றைய மோட்டார் சைக்கிளுடன் தலைமறைவாகியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக குறித்த மோட்டார் சைக்கிளிற்கு (லீசிங்) பணம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment