Monday, September 18, 2017

வேதன மோசடிகள்: தொடரும் மின்சாரசபை போராட்டம்!!

இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு வேதனம் வழங்கப்படுகின்றபோது பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக கூறி இந்த மின்சார சபை போராட்டம் தொடர்கிறது.
இந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13ஆம் திகதி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் குறித்து பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளபோதும், தீர்வுகள் எட்டப்படாத நிலையில் இன்றும் போராட்டம் தொடர்கின்றது.
இதேவேளை மின்சார சபை ஊழியர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டாலும் மின்விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லையென மின்வலுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மின்சார பணியாளர்களின் 2 நாள் போராட்டம் வேதனத்துடனான விடுமுறையான கருதப்படும் என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இந்த போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவரும் வகையில் இன்று (திங்கட்கிழமை) முக்கிய பேச்சு வார்த்தைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment